search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை சிறுவன் பலி"

    மதுரையில் மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை லாலாபிள்ளை குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் பிரசன்னா (வயது6).அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று காலை பிரசன்னா வீட்டின் மாடியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரசன்னாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×